“ஒண்ணா வேலை செய்யறோம்னு சொல்லியே உடம்ப புண்ணாக்கிட்டிங்களே” -கூட வேலை செய்யுறவங்களால் குதறப்பட்ட பெண்

 

“ஒண்ணா வேலை செய்யறோம்னு சொல்லியே உடம்ப புண்ணாக்கிட்டிங்களே” -கூட வேலை செய்யுறவங்களால் குதறப்பட்ட பெண்

மத்தியப் பிரதேசத்தின் சட்னா மாவட்டத்தில் கொல்கவன் பகுதியில் ஒரு 25 வயதான பெண் தன்னுடைய விதவை தாயுடன் தனியே வசித்து வருகிறார் .அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார் .அவரோடு பல ஆண்களும் வேலை செய்கிறார்கள் .அந்த பெண் தினமும் ஆபீஸ் வேலை முடிந்து தனியாக பஸ் பிடித்து வீட்டுக்கு செல்வது வழக்கம் .

“ஒண்ணா வேலை செய்யறோம்னு சொல்லியே உடம்ப புண்ணாக்கிட்டிங்களே” -கூட வேலை செய்யுறவங்களால் குதறப்பட்ட பெண்

அதன்படி கடந்த வியாழக்கிழமையன்று அந்தபெண்   வழக்கம் போல மாலை ஆறு மணிக்கு ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு திரும்ப முடிவெடுத்து அங்குள்ள பஸ் நிறுத்ததில்  நின்று கொண்டிருந்தார் .அப்போது அவரோடு வேலை செய்யும்  சத்யேந்திர பால், சந்தன் யாதவ், ஜெய்பால் யாதவ் மற்றும் பஞ்சாபி தோஹர் ஆகியோர் ஒரு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்கள் .அப்போது அவர்கள் தங்களோடு வேலை பார்க்கும் அந்த பெண் தனியாக பஸ்சுக்காக காத்திருப்பதை பார்த்து தங்களோடு காரில் வருமாறு கூறினார்கள் .அவர்களின் பேச்சை நம்பி அந்த பெண் அவர்களோடு காரில் சென்றார் .அப்போது அவர்கள் காரில்  போகும்போது அந்த பெண்ணை அனைவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம்  செய்துள்ளார்கள் .மேலும் இந்த விஷயத்தை  யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார்கள் .

ஆனால் மறுநாள் அந்த பெண் தன்னுடைய தாயாரோடு அங்குள்ள காவல் நிலையத்தில்  அந்த  நான்கு பேர் மீதும் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்

அதன் பிறகு பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட  சத்யேந்திர பால், சந்தன் யாதவ், ஜெய்பால் யாதவ் மற்றும் பஞ்சாபி தோஹர் ஆகிய நால்வரையும் கைது செய்தார்கள் .

“ஒண்ணா வேலை செய்யறோம்னு சொல்லியே உடம்ப புண்ணாக்கிட்டிங்களே” -கூட வேலை செய்யுறவங்களால் குதறப்பட்ட பெண்