திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

 

திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் – கரூர் சாலையில் உள்ள என்.பாறைபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்‌. இவரது மனைவி அர்ச்சனா. இவர்கள் நேற்று மாலை ஊரில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். இவர்களுடன் சக்திவேலின் அண்ணன் மகள்கள் சத்தியா பாரதி (14 ), ஐஸ்வர்யா (11) ஆகியோரும் சென்றிருந்தனர். இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் துணி துவைத்து கொண்டிருந்த நிலையில், குழந்தைகள் இருவரும் ஆற்றில் இறங்கி குளித்து உள்ளனர்.

திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

இதனிடையே, ஆற்றில் அதிகளவு மணல் அள்ளியதால் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத சிறுமிகள் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேலும், அர்ச்சனாவும் குழந்தைகளை காப்பாற்ற ஆற்றில் குதித்து தேடினர். ஆனால், அவர்களும் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர்.தகவல் அறிந்த கிராமத்தினர் ஆற்றில் இறங்கி தேடிபோது, 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் அள்ள தோண்டிய ராட்ச பள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.