பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை விதித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்!
Aug 27, 2020, 08:36 IST1598497611000
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் (78 ) காலமானார். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் லட்சுமணன் உயிரிழந்துள்ளார். சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்துள்ள இவர் மாசு கட்டுபாடு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வழக்கு ஒன்றில் பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.
லட்சுமணனின் மனைவி மீனாட்சி உடல்நலக்குறைவால் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த நிலையில் தற்போது லட்சுமணனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.