தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் உடல்நல குறைவால் காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் இவர் தேமுதிகவின் பொருளாளராக இருந்த நிலையில் கடந்த 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று வெற்றிவாகை சூடினார்.
பின்னர் தேமுதிகவில் அதிருப்தி எம்எல்ஏவாக மாறி அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

இந்நிலையில் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.சுந்தர்ராஜன் அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.