முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி  மனு தாக்கல்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி  மனு தாக்கல்!

நடிகை சாந்தினி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவரால் 3 முறை கருவுற்று கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அடித்து காயம் ஏற்படுதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி  மனு தாக்கல்!

சென்னை அழைத்து வரப்பட்ட மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.