“இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? – உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

 

“இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? – உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரத்தைக் காட்டிலும் உதயநிதியின் பிரச்சாரம் தனிக்கவனம் பெற்றது. அவர் மதுரை எய்ம்ஸ் செங்கலைக் கொண்டு மேற்கொண்ட பிரச்சாரம் அனைவர் மத்தியிலும் வரவேற்பு பெற்றது. ஆனால் இதைவிட ஒவ்வொரு அதிமுக முன்னாள் அமைச்சருக்கும் பட்டப்பெயர் வைத்து அழைத்து பிரச்சாரம் செய்தார். இவர் ஊத அவங்க ஆட என்பது போல் ஒவ்வொரு பட்டப்பெயராக உதயநிதி சொல்ல மக்கள் அதெல்லாம் எந்த அமைச்சர்கள் என கத்தி சொல்லினர்.

“இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? – உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

அதில் முக்கியமானவர் ஜெயக்குமார். இவருக்கும் உதயநிதிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். ஜெயக்குமாரை ஜெயக்குமார் என்று அழைப்பதைக் காட்டிலும் மெயின் ரோடு என்றே உதயநிதி அடிக்கடி கூறுவார். ஜெயக்குமாரும் சும்மா இல்லை செய்தியாளர்களிடம் பேசுகையில் உதயநிதியை கலாய்த்துவிடுவார். உதயநிதியை அவர் சாக்லேட் பாய் என்று சொல்ல உதயநிதியோ இவரை பிளேபாய் என்று சொல்ல தேர்தல் பிரச்சாரம் ரகளையானது.

“இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? – உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

அதேபோன்றதொரு சம்பவம் தான் இன்று அரங்கேறியிருக்கிறது. சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை போரடித்துவிட்டது போலும். சேப்பாக்கம் சேகுவேரா இப்போது எங்கே என தெரியவில்லை” என்றார்.

ஜெயக்குமாரின் கலாய் ஒரு பக்கம் இருந்தாலும் இதன்மூலம் சமீப நாட்களாக உதயநிதி சட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகி வருவது என்ற செய்தி கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சியிலிருந்து ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவைக்கு முதல் ஆளாக வருகை தந்த உதயநிதி தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் ஆப்சென்ட் ஆகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.