முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவு : முதல்வர் இரங்கல்!

 

முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவு : முதல்வர் இரங்கல்!

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவு : முதல்வர் இரங்கல்!

உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியவர் தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன். சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக இருந்த இவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர்.92 வயதான ஓய்வு பெற்ற டிஜிபி ராதாகிருஷ்னன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவு : முதல்வர் இரங்கல்!

இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டிஜிபி போன்ற உயர்ந்த பதவிகளில் திறம்பட பணியாற்றியவர் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் . அவரது மறைவு செய்தியை கேட்டு துயருற்றேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.