அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்!

 

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்!

விழுப்புரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் த.கிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் அதாவது 1977 இல் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். த.கிருஷ்ணன் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்!

விழுப்புரம் அய்யனார்குளம் வீதி நாலாயிரம் தெருவில் வசித்தவர் கிருஷ்ணன். இவர் ஆரம்ப காலத்தில் சோடா கடை நடத்தியவர் என்பதால் இவரை சோடா கிருஷ்ணன் என அந்த ஊரில் அழைப்பர். இவருக்கு மனையும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பொறுப்பில் இந்தார். வயதுமுதிர்வின் காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து அண்மையில் ஒதுங்கிய இவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் நாளை விழுப்புரத்தில் நல்லடக்கம் செய்யவுள்ளது.