‘அடுத்த 4 நாட்களுக்கு… ‘ 7 மாவட்டங்களில் கனமழை!

 

‘அடுத்த 4 நாட்களுக்கு… ‘ 7 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கடலூர், மயிலாடுதுறை ,பெரம்பலூர், அரியலூர் ,சேலம் ,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுவையில் இடியுடன் கூடிய மிதமான மழையும் ,ஏனைய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

‘அடுத்த 4 நாட்களுக்கு… ‘ 7 மாவட்டங்களில் கனமழை!

நாளை செங்கல்பட்டு ,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை ,கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும்.

‘அடுத்த 4 நாட்களுக்கு… ‘ 7 மாவட்டங்களில் கனமழை!

வருகின்ற 27ம் தேதி நீலகிரி ,கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் , ஏனைய மாவட்டங்கள் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

இன்று முதல் 27ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.