சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய பதவி -முதல்வர் அதிரடி

 

சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய பதவி -முதல்வர் அதிரடி

திண்டுக்கல் ஐ லியோனியை தொடர்ந்து சாலமன் பாப்பையாவுக்கும் முக்கிய பதவி வழங்கப்படுகிறது. பள்ளி ஆசிரியரும் முன்னாள் பள்ளி ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய பதவி -முதல்வர் அதிரடி

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ததால் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனி ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்று அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு தன் ஆசிரியர் பணியை இழக்க நேரிட்டது. இதையடுத்து திமுகவில் சிறப்பு பேச்சாளராக நியமிக்கப்பட்டார் திண்டுக்கல் ஐ லியோனி. தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கி வந்த லியோனி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் தமிழகமெங்கும் சுற்றி தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அதன் பயனாக திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திண்டுக்கல் ஐ லியோனி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பதவி வழங்கி மரியாதை செய்திருக்கிறார்.

சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய பதவி -முதல்வர் அதிரடி

நிலையில் பட்டிமன்றத்தில் மூத்தவரான சாலமன் பாப்பையாவும் முதல்வர் ஸ்டாலின் முக்கிய பதவியை வழங்கவிருக்கிறார் என்று தகவல். மூத்த பட்டிமன்ற பேச்சாளரும் கல்லூரி பேராசிரியருமான சாலமன் பாப்பையா திமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து இயங்கி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்ற தலைவர் பொறுப்பு வழங்க முதல்வர் முடிவெடுத்திருப்பதாக தகவல். இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்பு உட்பட பல்வேறு உறுப்புகளுக்கு புதியவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர். அதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்புக்கு பேராசிரியர் சாலமன்பாப்பையாவை நியமிக்க முதல்வர் முடிவெடுத்திருக்கும் நிலையில் கடந்த 22ஆம் தேதி அன்று மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலமன் பாப்பையா சந்தித்திருக்கிறார் அவருடன் அவரது பட்டிமன்ற குழுவில் இருக்கும் ராஜாவும் சென்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.