ஆண் நண்பர்களுடன் தங்கியிருந்த விமான பணிப்பெண் -குடிபோதையில் நடந்த கொடூரம் .

 

ஆண் நண்பர்களுடன் தங்கியிருந்த விமான பணிப்பெண் -குடிபோதையில் நடந்த கொடூரம் .

ஒரு விமான பணிப்பெண்ணை அவரோடு தங்கியிருக்கும் ரூம் நண்பர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் நடந்துள்ளது

ஆண் நண்பர்களுடன் தங்கியிருந்த விமான பணிப்பெண் -குடிபோதையில் நடந்த கொடூரம் .


குஜராத்தில் 25 வயதான பெண், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச (எஸ்விபிஐ) விமான நிலையத்தில் ஒரு விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார் .அவர் அகமதாபாத்தில் கோட்டா அருகே ஒரு அலுவலக குடியிருப்பில் , தன்னுடைய அலுவலக தோழர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் அறையில் தங்கியுள்ள ஆண் நண்பர் ஒருவர் ,கடந்த மே 3ம் தேதியன்று தன்னோடு மூன்று ஆண்களை கூட்டி வந்தார் .அப்போது அந்த ஆண்கள் அனைவரும் அந்த பெண்ணின் முன்பே மதுபானம் குடித்தனர் .பிறகு அவர்களில் ஒருவர் அந்த பெண்ணை உடலில் தொட்டு அவரின் அருகில் படுத்துகொண்டு பாலியல் கொடுமை செய்தார் .பிறகு இதே போல மே 9ம் தேதியும் அந்த பெண்ணிடம் பாலியல் உதவி கோரி டார்ச்சர் செய்தனர் .அப்போதும் அங்கிருந்த நணபர்கள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை .
அதனால் பயந்து போன அந்த பெண் அந்த அறையிலிருந்து வெளியே ஓடிவந்தார் .பின்னர் அங்கிருந்த மற்ற நண்பர்களை உதவிக்கு கூப்பிட்டார் .ஆனால் அதற்குள் அங்கு ஓடிவந்த அந்த மூவரும் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் .அதனால் அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த நபர்கள் மீது புகார் கொடுத்தார் .போலீசார் அந்த நான்கு பேர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்