ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
Oct 23, 2020, 19:56 IST1603463184000
கன்னியாகுமரி
உள்நாட்டு மீனவர்களுக்கு மீனவர் வாரியத்தின் வழியாக ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மீனவர் வாரியத்தில் விண்ணப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு உடனடியாக மீனவர் வாரிய அட்டை வழங்கவும், புதிய உறுப்பினர்களை பதிவுசெய்யவும் வலியுறுத்தப்பட்டது