சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

 

சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் நவ.6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

நாடு முழுவதும் வரும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்காக மக்கள் ஹாப்பிங் செய்ய தொடங்கி விட்டனர். அதே போல, ஆன்லைன் ஹாப்பிங் நிறுவனங்களும், ஏக போக டிஸ்கவுண்ட்களை அறிவித்திருப்பதால் மக்கள் உற்சாகத்துடன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, தீபாவளி பண்டிகையின் கதாநாயகனான பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் விறுவிறுப்படைந்து வருகிறது.

சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு நவ.6ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் சென்னை மக்களின் வசதிக்காக தீவுத்திடலில் பட்டாசுகள் விற்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அங்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.