பட்டாசு ஆலை தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை!

 

பட்டாசு ஆலை தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை!

விருதுநகர்

சிவகாசி அருகே உடல்நல குறைவால் அவதிப்பட்ட இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த மீனம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(29). இவர் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை மேம்படாததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

பட்டாசு ஆலை தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் சங்கர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகினார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சங்கரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அனுப்பங்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு விசாணை மேற்கொண்டனர். அப்போது, அது மாயமான தொழிலாளி சங்கர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.