பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

 

பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

மதுரை செங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

மதுரை மாவட்டம் – டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள செங்குளம் ஊராட்சி பகுதியில் ராஜலட்சுமி பட்டாசு ஆலை ஒன்று இயங்கி இயங்கி வந்தது. இங்கு நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேல்த்தாய், லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள் உள்பட 5 பெண் தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். அத்துடன் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட மூவர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 5 பெண் தொழிலாளர்கள் இறந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் லக்ஷ்மி, மகாலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வெடி விபத்தில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.