சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – தொழிலாளி பலி!

 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – தொழிலாளி பலி!

விருதுநகர்

சிவகாசி அருகே இன்று காலை படடாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்தர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த காக்கிவாடன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென உராய்வு ஏற்பட்டு, மூலப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 3-க்கும் மற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – தொழிலாளி பலி!

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தர்மலிங்கம் என்ற ஊழியர் உயிரிழந்தார். மேலும், 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை சக ஊழியர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மாரனேரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டு பணிகளில் ஈடுபட்டனர்.

பின்னர், உயிரிழந்த தர்மலிங்கத்தின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வெடி விபத்து குறித்து ஆலை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.