திருப்பதியில் லட்டு தயார் செய்யும் இடத்தில் தீ! எண்ணெய் சட்டி வெடித்து சிதறியது!

 

திருப்பதியில் லட்டு தயார் செய்யும் இடத்தில் தீ! எண்ணெய் சட்டி வெடித்து சிதறியது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயார் செய்யும் மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தி தயாரிக்கும் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதாவது சமையலறையில் இருந்த எண்ணெய் சட்டி வெடித்து சிதறியதில் ஊழியர்கள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த ஊழியர்கள் 5 பேரும் திருமலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதியில் லட்டு தயார் செய்யும் இடத்தில் தீ! எண்ணெய் சட்டி வெடித்து சிதறியது!

சம்பவ இடத்தில் புகைப்போக்கி வழியாக தீ வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் எழுந்ததால் பக்தர்கள் அலறியடித்தப்படி சென்றனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.