புதுச்சேரி ஒயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; தீயணைப்பு பணி தீவிரம்!

 

புதுச்சேரி ஒயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; தீயணைப்பு பணி தீவிரம்!

புதுச்சேரி அருகே உள்ள சேதாரப்பட்டியில் தனியார் ஒயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலைக்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், ஆலையின் ஒரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

புதுச்சேரி ஒயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; தீயணைப்பு பணி தீவிரம்!

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீ பரவியுள்ளது. பின்னர், 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொழிற்சாலை முழுவதுமா தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணியில் சவால் நீட்டிப்பதாக தெரிகிறது. இந்த திடீர் விபத்தால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

தகவல் அறிந்து வந்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு தற்போது பெரும் பரபரப்பு நிலவுகிறது.