கோவை அருகே தனியார் நுற்பாலையில் திடீர் தீ விபத்து!

 

கோவை அருகே தனியார் நுற்பாலையில் திடீர் தீ விபத்து!

கோவை

கோவை அருகே தனியார் வார்ப்பு நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வார்ப்பு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றபோது, தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஆலை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

கோவை அருகே தனியார் நுற்பாலையில் திடீர் தீ விபத்து!

இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் பல்லடம், பீளமேடு, அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் அவர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில், நூற்பாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து, கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.