‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’.. மாணவர்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

 

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’.. மாணவர்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’.. மாணவர்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

இதனை எதிர்த்து 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணையின் போது, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்றும் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் யுஜிசி தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், அரசு தேர்வுகளை ரத்து செய்து விடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.