பொள்ளாச்சி ஜெயராமன், மகன் மீது வழக்குப்பதிவு!!

 

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் மீது வழக்குப்பதிவு!!

துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் மீது வழக்குப்பதிவு!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து சபரிமாலா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் திமுக – அதிமுக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் கிரி மற்றும் உதயகுமார் ஜெகதீஷ் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன், மகன் மீது வழக்குப்பதிவு!!

இந்நிலையில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒக்கிலிபாளையத்தில் திமுக – அதிமுக தரப்புக்கு மத்தியில் தகராறு வெடித்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், தந்தையின் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்வதாக மிரட்டியதாக ஒக்கிலிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி ஜெயராமன், மகன் பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.