உர விற்பனை நிலையங்களில் மின்னணு முறையிலேயே பணபரிமாற்றம் : திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்!
Jul 11, 2020, 09:16 IST1594439170000
இந்தியா முழுவதும் உர விற்பனை நிறுவனங்கள், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மூலம் பணம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.இதனால் ஜூலை 15-ம் தேதிக்குள் உர விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் பணப் பரிவர்த்தனைக்கான ரகசியக் குறியீட்டு எண் பெற வேண்டும் என அறிவித்தது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளிடம் விற்பனையின் போது மின்னணு முறையிலேயே பணபரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என உர விற்பனை நிலையங்களுக்கு திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உரத்தை விற்பனை செய்யும் போது விவசாயிகளிடம் கியூஆர் கோட், யூபிஐ ஸ்டிக்கரை கடைகளில் ஒட்டி வைத்து தொகை பெற கூறியுள்ளார்.