பெண் போலீசை வீட்டுக்கு அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – இளைஞரின் தாயாரும் உடந்தை

 

பெண் போலீசை வீட்டுக்கு அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – இளைஞரின் தாயாரும் உடந்தை

முகநூல் மூலமாக ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருக்கிறது அந்த பெண் போலீசுக்கு . அந்த இளைஞரை போலீஸ் உண்மையாகவே காதலித்து வந்திருக்கிறார். ஆனால் காதலிப்பது மாதிரி அந்த பெண் போலீசிடம் திட்டம் போட்டு நடித்து வந்திருக்கிறார் அந்த இளைஞர்.

பெண் போலீசை வீட்டுக்கு அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – இளைஞரின் தாயாரும் உடந்தை

திடீரென்று ஒரு நாள் தன் சகோதரருக்கு பிறந்த நாள் என்றும், பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு அப்பெண்ணை அழைத்து இருக்கிறார். பிறந்தநாள் பரிசு வாங்கி சென்று பெண் போலீஸ் சென்றிருக்கிறார்.

அப்போது அந்த பெண்போலீஸ் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அந்த இளைஞரும் அவருடைய இரண்டு நண்பர்களும் சேர்ந்து பெண் போலீஸார் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கொடுமைக்கு எல்லாம் கொடுமையாக அந்த இளைஞரின் தாயார் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்தப் பெண் போலீஸ், உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொன்னதற்கு அந்த வீடியோவை காட்டி என் மீது நடவடிக்கை எடுத்தால் வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன். உனக்குத்தான் அப்புறம் ஆபத்து என்ற இளைஞர் மிரட்டியிருக்கிறார்.

தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் தான் இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அந்த வீடியோவை எடுத்து இருக்கிறார்கள் என்பதும் தெரிந்து அந்த பெண் போலீஸ் அதிர்ந்து போயிருக்கிறார். அதனால் தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் இளைஞர் அவர் நண்பர்கள், தாயார் உட்பட 5 பேர் மீது புகார் அளித்திருக்கிறார் . அந்த இளைஞரின் தாயார் மற்றும் நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேர் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.