“கேமெராவை ஆன் பண்ணியதும் என்னை கெடுக்க ஆரம்பித்தார்கள்” -சீரியல் ஷூட்டிங்னு சீரழிக்கப்பட்ட பெண்.
நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச பட மோசடி வழக்கில் புதிய திருப்பமாக ஒரு பெண் மாடல் அவர்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச பட மோசடி வழக்கு தினந்தோறும் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது .இப்போது விரார் நகரைச் சேர்ந்த 22 வயதான பெண் மாடல், லோனாவ்லாவில் வசித்த சந்தோஷ், ரோவா கான் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகிய மூவர் மீதும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் .ஏற்கனவே மும்பை போலீசால் கைது செய்யப்பட்டுள்ள அவர்களை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது .
மிஸ் ஆசியா பிகினி டிரஸ் போட்டியில் வெற்றிபெற்ற நடிகை கெஹானாவின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், புது முக நடிகைகளின் பாலியல் வீடியோக்களை வலைத் தொடர்களில் தயாரித்து வழங்கிய வழக்கில் மும்பை காவல்துறையினரால் இந்த மூன்று பேரும் விசாரிக்கப்படுகிறார்கள்
இந்த வழக்கில் சமீபத்தில் ஒரு பெண் மாடல் சிக்கியுள்ளார் .அவரளித்த புகாரில் தாம் கெஹானாவின் ஒரு போட்டோ ஷூட்டிற்கான விளம்பரத்தைக் கண்டதாகவும், அதனால் 2020 டிசம்பரில் சந்தோஷ் என்பவருடன் தொடர்பு கொண்டதாகவும் போலீசாரிடம் கூறினார். அப்போது சந்தோஷ் , ஒரு வலை தொடரின் படப்பிடிப்புக்கு தன்னை அழைத்து சென்றதாக அவர் கூறினார்
பின்னர் வலைத் தொடரின் படப்பிடிப்பு என்று அவர்கள் ஆபாச படமெடுப்பதையறிந்த அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது , கான் மற்றும் சந்தோஷ் அவரை மிரட்டியுள்ளார்கள் . பிறகு கான் மற்றும் சந்தோஷ் அவரின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கழற்றியுள்ளார்கள்.பிறகு ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினார். இந்த முழு செயலும் சந்தோஷ் மற்றும் கான் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டது,.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறினார் .இந்த வழக்கில் பிப்ரவரி 5 ம் தேதி கான் மற்றும் நான்கு பேரை மும்பை குற்றப்பிரிவு கைது செய்துள்ளது .போலீஸ் விசாரணையில் அவர்கள் ஹாட்ஹிட் ஆப் மூலம் பாலியல் வீடியோக்களை பதிவேற்ற வெளிநாட்டு ஐபி முகவரிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டது