6-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் மருத்துவர் பலி!

 

6-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் மருத்துவர் பலி!

கோவை

கோவை சிங்காநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மருத்துவர் ராம்குமார். இவரது மனைவி வத்சலாதேவி (56). இவர் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்றார். இந்த நிலையில், வத்சலாவுக்கு வலிப்பு நோய் இருந்ததால், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

6-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் மருத்துவர் பலி!

நேற்று 6-வது மாடியில் உள்ள தனது வீட்டில் வத்சலா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த வத்சலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து மருத்துவர் ராம்குமார் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.