தருமபுரியில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

 

தருமபுரியில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி

தருமபுரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி பிடமனேரி அருகேயுள்ள மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி தேவி கருமாரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். தேவி கருமாரி தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து, கடந்த ஓராண்டாக தருமபுரி டவுன் காவல் துறையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு தனிப் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

தருமபுரியில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், தேவி கருமாரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதற்காக அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே, உடலநலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட தேவி கருமாரி நேற்றிரவு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.