‘6 வயது மகளை’ பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூர தந்தை: உ.பியில் நேர்ந்த சோகம்!

 

‘6 வயது மகளை’ பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூர தந்தை: உ.பியில் நேர்ந்த சோகம்!

உத்திரபிரதேசம் அருகே குடிபோதையில் 6 வயது மகளை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ராஜ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகேந்திரா. இவர் பாப்லு என்று அழைக்கப்படுகிறார். மதுபோதையில் தனது குடும்பத்தினருடன் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்ட, பாப்லு அக்கம் பக்கத்தினருடன் வருடமும் சண்டையில் ஈடுபடுவாராம். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் தனது குடும்பத்துடன் சண்டையிட்ட பாப்லு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

‘6 வயது மகளை’ பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூர தந்தை: உ.பியில் நேர்ந்த சோகம்!

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து, சிறுமி கதறியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஐபிசி பிரிவு 307ன் கீழ் பாப்லுவை கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், மேல் சிகிச்சைக்காக சிறுமி மொராதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.