முன்விரோதம் காரணமாக தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது

 

முன்விரோதம் காரணமாக தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது

திருச்சி

முசிறி அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(26). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு செல்வகுமாரின் உறவினரிடம், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனை, அவர் கண்டித்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது

இந்த நிலையில் நேற்று மணிகண்டன் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் அருண்(23) மற்றும் அஜித்குமார்(22) ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். மேலும், அதனை தடுக்க முயன்ற செல்வகுமாரின் தந்தை மணியையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக செல்வகுமார் முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் அருணை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அஜித்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.