11 வயது மகளை வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை!

 

11 வயது மகளை வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை!

திருப்பூரில் 11 வயது மகளை வன்கொடுமை செய்ய முயன்ற பெற்ற தந்தையை அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

11 வயது மகளை வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை!

அவிநாசியை அடுத்து பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தனது காதல் மனைவி கவிதா (32), 11 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் வசித்துவருகிறார். கணவன் மனைவி இருவரும் பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு பணிக்கு சென்றுவிட்டு, பிரகாஷ் இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பினார். காலை கவிதா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மகளிடம் தகாத முறையில் நடந்து வன்கொடுமை செய்ய பிரகாஷ் முயற்சித்ததாகவும், சுதாரித்துக்கொண்ட சிறுமி தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பணி முடிந்து வீட்டிற்கு வந்த தனது தாயிடம் நடந்த விபரங்களை சிறுமி கூறவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தாயான கவிதா அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பெற்ற மகளையே வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.