‘105 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகள்’ : தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை!

 

‘105 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகள்’ : தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை!

மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு மகள் ஒருவர் இருக்கிறார். அந்த தம்பதி கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், மகள் தன் தாயுடன் வசித்து வருகிறார். விவகாரத்து ஆனதும் மறு ஆண்டே சிறுமியின் தாய், மற்றொரு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சிறுமியின் தாயார் மட்டுமே வேலைக்கு சென்ற நிலையில், இரண்டாவது கணவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

‘105 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகள்’ : தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை!

தனது வளர்ப்பு மகளிடம் தவறாக நடந்து கொண்ட அவர், மனைவிக்கு தெரியாமல் 105 முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அம்மாவிடம் சொல்லக் கூடாது என்றும் அந்த சிறுமியை மிரட்டி அடித்திருக்கிறார். வலி தாங்க முடியாமல் சிறுமி, தனது அம்மாவிடம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது இரண்டாவது கணவர் மீது உடனடியாக புகாரளித்துள்ளார்.

‘105 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகள்’ : தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை!

அந்த நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு மேலசிய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு 1050 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, 24 பிரம்படிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.