“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .

 

“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .


கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த மகனை கடத்திய ஒரு தந்தையை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிறுவனை மீட்டார்கள்

“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ராவில் ரிங்கு சரோஜ் என்ற 35 வயதான நபர் ஒரு பெண்ணோடு கடந்த எட்டு ஆண்டுகளாக கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தார் .இந்நிலையில் அவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார் .இதற்கிடையே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது .அதனால் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் .
இப்போது ரிங்குவிற்கு அவரின் மகன் மீது கொள்ளை ஆசை .அதனால் அவர் தன்னுடைய காதலியை பிரிந்தாலும் ,அவர் தனது மகனை வளர்க்க ஆசைப்பட்டார் .அதனால் அவர் தன்னுடைய காதலியிடம் நமக்கு பிறந்த மகனை தான் வளர்க்க ஆசைப்படுவதாக கூறினார் .ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை .அதனால் இருவருக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது .அதனால் ரிங்கு தன்னுடைய மகனை பார்க்க அந்த காதலியின் வீட்டிற்கு வருவார் .அப்போதெல்லாம் அந்த காதலி அவரை இங்கு வரக்கூடாது என்று விரட்டியுள்ளார் .
அதனால் அந்த ரிங்கு தன்னுடைய மகனை கடத்தி செல்ல முடிவெடுத்தார் .அதனால் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அவரின் மகனை ஒரு ரயிலில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு கடத்தி சென்றார் .இதற்க்கிடையே தன்னுடைய மகனை காணாத அந்த தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடினார்கள் .அப்போது அந்த சிறுவனின் தந்தை ரிங்குவின் செல்போன் சிக்னலை வைத்து ரயிலில் சிறுவனை கடத்திய அவரை பிரக்யராஜில் கைது செய்தார்கள் .பின்னர் அந்த சிறுவனை அவரின் தாயிடம் ஒப்படைத்தார்கள்

“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .