‘கிறுக்கன் என திட்டிய மகள்’ கொடூரமாக கொலை செய்த தந்தை தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

 

‘கிறுக்கன் என திட்டிய மகள்’ கொடூரமாக கொலை செய்த தந்தை தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆதிகாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கோபால்- மணி. இவர்களுக்கு ரமேஷ், பிரியங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். கோபாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார். இவரது மனைவி மணி வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வதாக தெரிகிறது. அதேபோல ரமேஷும் பேக்கரி வைத்திருப்பதால் அவரும் பெரும்பாலும் கடையிலேயே தான் இருப்பாராம்.

‘கிறுக்கன் என திட்டிய மகள்’ கொடூரமாக கொலை செய்த தந்தை தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், பிரியங்காவும் கோபாலும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த பிரியங்கா திடீரென கோபாலை ‘கிறுக்கன்’ என்று திட்டியுள்ளார். ஏற்கனவே அப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் கிறுக்கன் என்று சொல்வதால் ஆத்திரத்தில் இருந்த கோபால், அங்கேயே மகளை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

‘கிறுக்கன் என திட்டிய மகள்’ கொடூரமாக கொலை செய்த தந்தை தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!

பின்னர், தான் பிரியங்காவை கொலை செய்துவிட்டதாக தனது தம்பிக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார். ஆனால், அதை அவர் நம்பாததால் வீட்டுக்கே நேரில் சென்ற கோபால், தம்பியை கையுடன் அழைத்து வந்து பிரியங்காவின் சடலத்தை காட்டியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த கோபாலின் தம்பி அவரை திட்டியதாக தெரிகிறது. மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கோபால், அப்போது தான் பெற்ற மகளை தானே கொலை செய்ததை உணர்ந்திருக்கிறார். மகளை கொன்ற விரக்தியில் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கிறுக்கன் என திட்டியதால் தந்தையே மகளை கொலை செய்த, இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.