2 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : அதிர்ந்து போன தாய்!

 

2 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : அதிர்ந்து போன தாய்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு பவானி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும், பிறந்து 65 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் பவானி மகளிர் சுய உதவி குழுக்கு பணம் செலுத்த சென்றுள்ளார். இதனால் கணவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பாவனி வீட்டுக்கு வந்த போது கணவர் துளசிமாதன் 2 மாத குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.

2 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : அதிர்ந்து போன தாய்!

இதை தொடர்ந்து குழந்தையை கணவரிடமிருந்து மீட்ட அவர் ஆலாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : அதிர்ந்து போன தாய்!

இதனிடையே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவானி தனது கணவர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதை தொடர்ந்து துளசிமாதன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.