வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் !! கணவரை காவல்நிலையத்திற்கு அனுப்பிய மனைவி !

 

வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் !! கணவரை காவல்நிலையத்திற்கு அனுப்பிய மனைவி !

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் ரைபோகா காவல் நிலையத்தின் கீழ் ஜுனுமூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த கிஷோர் மின்ஜ் என்பவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் தனது 11 வயது வளர்ப்பு மகளை 20 நாட்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபரால் சிறுமி பல வேதனைகளை சந்தித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு வயது இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார் அவரது தாய் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அந்த சிறுமியை தனது மகளாக ஏற்றுக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. எனவே சிறுமியின் தாய்வழி அத்தை அவளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் !! கணவரை காவல்நிலையத்திற்கு அனுப்பிய மனைவி !

அத்தையின் கணவரான கிஷோர் ஏப்ரல் 25ம் முதல் அடிக்கடி மது போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியுள்ளார். சித்திரவதை மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தது.

வலியைத் தாங்க முடியாமல், சிறுமி தனது அத்தைக்கு இதை தெரிவித்தார். இதனால் வேதனை அடைந்த அவரது அத்தை சிறுமிக்கு ஆதரவாக செயல்பட்டு கணவர் மீது ரைபோகா காவல் நிலையத்திற்குச் சென்று பாலியல் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால் இந்த விஷயத்தை உடனே வெளியில் சொல்ல முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.