நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக அக்.28-ல் விவசாயிகள் சாலை மறியல்

 

நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக அக்.28-ல் விவசாயிகள் சாலை மறியல்

கடலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தை கண்டித்து வரும் 28ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த, போராட்டக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக அக்.28-ல் விவசாயிகள் சாலை மறியல்

கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக அமையவுள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்குதல், பி.முட்லூர் புறவழிச்சாலை தடத்தினை மாற்று வழிதடத்தில் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2 ஆண்டுகளாக பரங்கிப்பேட்டை பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பி.முட்லூர், தீர்த்தாம்பாளையம் மற்றும் மஞ்சகுழி கிராம ஊராட்சி தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி பி.முட்லூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபடுவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக அக்.28-ல் விவசாயிகள் சாலை மறியல்