“வேளாண் சட்டங்களை கண்டித்து டிச.11ல் ஆளுநர் மாளிகை முற்றுகை” – பி.ஆர்.பாண்டியன்

 

“வேளாண் சட்டங்களை கண்டித்து டிச.11ல் ஆளுநர் மாளிகை முற்றுகை” – பி.ஆர்.பாண்டியன்

திருச்சி

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக, விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், அதன் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் இன்று திருச்சியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 22 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்,

“வேளாண் சட்டங்களை கண்டித்து டிச.11ல் ஆளுநர் மாளிகை முற்றுகை” – பி.ஆர்.பாண்டியன்

வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம், பிரதமர் பேசாதது வன்மையாக கண்டிக்க தக்கது என கூறினார். வேளாண் சட்டத்தால் மற்ற மாநிலங்களில் சந்தைதான் பாதிக்கப்படும் என்றும், ஆனால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த விவசாயமும், இயற்கை வளங்களும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வேளாண் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது, தமிழர்களுக்கு செய்த துரோகம் என்று குற்றம்சாட்டிய அவர், இது ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரானது என்பதால், தமிழக அரசு அந்த சட்டத்திற்கான ஆதரவை திரும்ப பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார்.

“வேளாண் சட்டங்களை கண்டித்து டிச.11ல் ஆளுநர் மாளிகை முற்றுகை” – பி.ஆர்.பாண்டியன்

மேலும், பிரதமரை சந்தித்து இந்த சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தமிழக மக்கள் முதலமைச்சரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். அத்துடன், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களும், இந்த சட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் என தெரிவித்தார்.