புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

 

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவர் தனது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், மாரிமுத்து நினையாமல் இருப்பதற்காக ஆடுகளை கொட்டகைக்குள் கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மின்னல் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தற்கு சென்ற செம்பட்டிவிடுதி போலீசார், மாரிமுத்துவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சேவுகம்பட்டி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.