“வயிறு வலிக்கு வந்த பெண்ணின் வயிற்றை தொட்டு..” -பெண் நோயாளிக்கு மயக்க நிலையில் நடந்த கொடுமை .

 

“வயிறு வலிக்கு வந்த பெண்ணின் வயிற்றை தொட்டு..” -பெண் நோயாளிக்கு மயக்க நிலையில் நடந்த கொடுமை .


ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை அங்கிருந்த ஒரு போலி டாக்டர் பலாத்காரம் செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டார்

“வயிறு வலிக்கு வந்த பெண்ணின் வயிற்றை தொட்டு..” -பெண் நோயாளிக்கு மயக்க நிலையில் நடந்த கொடுமை .


பாகிஸ்தானின் தேரா காசி கானில் அருகில் பால்க் சர்வார் நகரில் அமைந்துள்ள போதனா மருத்துவமனைக்கு கடந்த வாரம் ஒரு பெண் சிகிச்சைக்கு வந்தார் .அவர் கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறினார் .அவரை அந்த ஹாஸ்ப்பிட்டலில் முஹம்மது இம்ரான் என்பவர் பரிசோதனை செய்து அவருக்கு அப்பெண்டிக்ஸ் இருப்பதாக கூறி ,அவரை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கூட்டி சென்றார் .
பிறகு அவரின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியே நிற்கவைத்து விட்டு ,அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தார் .பிறீகு அவரின் வயிறு மற்றும் பல உடல் பாகங்களை தொட்டு பரிசோதிப்பது போல அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த பெண் அதை கண்டுபிடித்து அவர் அங்கிருந்து சத்தம் போட்டார் .அவரின் அலறல் சத்தம் கேட்ட அவரின் உறவினர்கள் அந்த அறைக்குள் ஓடி வந்தனர் .பிறகு அந்த பெண் தனக்கு அந்த டாக்டரால் நேர்நத கொடுமையை விவரித்தார் .அதற்குள் அந்த டாக்டர் அங்கிருந்து ஓடிவிட்டார் .
பிறகு அவர்கள் அந்த டாக்டரை பற்றி அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகத்திடம் கூறினார்கள் .ஆனால் அந்த நிர்வாகம் அவர் டாக்டர் இல்லை என்று கூறியது .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிஸை அழைத்தனர். போலீசார் விசாரித்து அந்த போலி டாக்டரை சம்பவ இடத்திலிருந்து கைது செய்தனர்