போலி நியமன ஆணை: தலைமறைவாக இருக்கும் தனியார் பள்ளி பங்குதாரரை பிடிக்க போலீசார் தீவிரம்

 

போலி நியமன ஆணை: தலைமறைவாக இருக்கும் தனியார் பள்ளி பங்குதாரரை பிடிக்க போலீசார் தீவிரம்

போலி நியமன ஆணை விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் தனியார் பள்ளி பங்குதாரரை பிடிக்க ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கொல்லம்பாளையம் ரயில்வே காலனியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளி தலைமையாசியையிடம் கடந்த 1ம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 29 வயது, ஆண் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தன்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாக கூறி, பணி ஆணையை கொடுத்துள்ளார். , அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

போலி நியமன ஆணை: தலைமறைவாக இருக்கும் தனியார் பள்ளி பங்குதாரரை பிடிக்க போலீசார் தீவிரம்

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் நியமன ஆணை கொடுத்தது தெரியவந்தது.

சிவகுமார் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்த போலி நியமன ஆணையத்தில் மூலையாக செயல்பட்டது சிவகுமார் பணியாற்றிய பள்ளியின் பங்குதாரர் என தெரியவந்தது. தற்போது அங்கு அந்த பங்குதாரர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த பங்குதாரரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலி நியமன ஆணை: தலைமறைவாக இருக்கும் தனியார் பள்ளி பங்குதாரரை பிடிக்க போலீசார் தீவிரம்

அவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் இந்த போலி நியமன ஆணையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தெரிய வரும்.