கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர்

கொசஸ்தலை ஆறு, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களை சேரந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (08.09.2020) இரவு 9.30 மணி முத ல் 4.00 மணி நேரத்திற்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்க படவுள்ளது. அதன்பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவுஉயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும்.நாளை காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, எனவே அக்கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியார் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்..