கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி : அடித்தே கொன்ற கணவன் : போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!!

 

கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி : அடித்தே கொன்ற கணவன் : போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!!

கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் ஓசூரில் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி : அடித்தே கொன்ற கணவன் : போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!!

கர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கும் சாந்தா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. பிரவீன் குமார் மற்றும் சாந்தா தம்பதி சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஓசூர் சென்றுள்ளனர் . அங்கு கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமார், சாந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியவர் சாந்தாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு கோலார் பகுதிக்கு சென்றுள்ளார் . அங்கு சாந்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு உடலை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி : அடித்தே கொன்ற கணவன் : போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!!

சாந்தாவின் உடல் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து ஓசூர் போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து பிரேம் குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. பிரவீன்குமாருக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்த நிலையில் அதை சாந்தா கண்டுபிடித்து விட்டதால் மனைவியை திட்டமிட்டு அவர் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஓசூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.