ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு!
Jul 8, 2020, 15:51 IST1594203695000
தமிழக அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் சமீபத்தில் தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு கூடுதல் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் விஜிலென்ஸ் டி.ஜி.பி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.