பேருந்துகளில் முண்டியத்துக்கொண்டு ஏறிய சுற்றுலா பயணிகளால் பரபரப்பு
Oct 26, 2020, 20:41 IST1603725118000
நீலகிரி மாவட்டம் ஊட்டி பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்கு திரும்ப சுற்றுலா பயணிகள் முண்டியத்துக் கொண்டு பேருந்துகளில்
ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூரில் பணிபுரியும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப இன்று ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகளவு பொதுமக்கள் குவிந்தனர். பேருந்து நிலையத்தில் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டதால், அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.