தொழில் நஷ்டம் – முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

 

தொழில் நஷ்டம் – முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

கரூர்

குளித்தலை அருகே தொழில் நஷ்டம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள மேலபஞ்சப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (37). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். குணசேகரன் அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், தொழிலில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழில் நஷ்டம் – முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

இதனால், மன வேதனையில் இருந்து வந்த குணசேகரன், கடந்த 15ஆம் தேதி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வந்த நிலையில், நேற்று காலை குணசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.