மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது

 

மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது

ஈரோடு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் மின்பகிர்மான சங்கத்தினர், போக்குவரத்து கழகம், டாஸ்மாக், வங்கி அதிகாரிகள் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது

அப்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, சத்யமங்கலம், கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்