சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

 

சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

ஈரோடு

ஈரோட்டில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் திண்டலில் இருந்து ரிங்ரோடு செல்லும் ஜீவாநகர் சாலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட இந்த சாலை, பின்னர் தார் போடாமல் உள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் சாலையில ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது.

சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

இதனால் இரவுநேரத்தில் இருசக்கர வானத்தில் செல்பவர்கள் சாலையில் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதனையடுத்து, சலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.