மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து – ஆவணங்கள், பொருட்கள் சேதம்

 

மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து – ஆவணங்கள், பொருட்கள் சேதம்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வீடு மற்றும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஓட்டுவீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், முன்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டினுள் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட

மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து – ஆவணங்கள், பொருட்கள் சேதம்

வெங்கடாசலம், கதவை உடைத்து வீட்னுள் இருந்த மகனை மீட்டுள்ளார். அதற்குள் மளமளவென பரவிய தீயானது வீடு மற்றும் மளிகைக்கடையிலும் பற்றி எரிய தொடங்கியது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த உபகரணங்கள், ஆவணங்கள் மற்றும் கடையில் இருந்த மளிகைப்பொருட்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான
பொருட்கள் தீயில் எரிந்து தேசமடைந்தது. இச்சம்பவம் குறித்து கடத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.