ஈரோட்டில் 3-வது நாளாக பரவலாக மழை… அதிகபட்சமாக கொடிமுடியில் 68 மி.மீ. பதிவு!

 

ஈரோட்டில் 3-வது நாளாக பரவலாக மழை… அதிகபட்சமாக கொடிமுடியில் 68 மி.மீ. பதிவு!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக பரவலாக பெய்த மழை நிலையில, அதிகபட்சமாக கொடுமுடியில் 68 மில்லி மீட்டர் பதிவாகியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகல் முழுவதும் வெயில் அடித்து வந்தாலும், மதியம் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து உள்ளது. கொடுமுடி, சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதேபோல் குண்டேரிபள்ளம் அணை பகுதியிலும் கனமழை பெய்தது.

ஈரோட்டில் 3-வது நாளாக பரவலாக மழை… அதிகபட்சமாக கொடிமுடியில் 68 மி.மீ. பதிவு!

மொடக்குறிச்சி, ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு பிறகு சாரல் மழை தூரிக் கொண்டே இருந்தது. இரவு நேரங்களிலும் சாரல் மழை நீடித்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவானது.

ஈரோட்டில் தொடர்ந்து 3-வது நாளாக பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:- கொடுமுடி – 68, குண்டேரிபள்ளம் – 30.6, மொடக்குறிச்சி – 16, ஈரோடு – 12, சென்னிமலை – 9.4, பெருந்துறை – 9, வரட்டுப்பள்ளம் – 4.4, பவானி – 2.8, பவானிசாகர் – 1.2, கோபி – 1.