ஈரோட்டில் இளைஞருக்கு டெங்கு பாதிப்பு- மருத்துவமனையில் அனுமதி

 

ஈரோட்டில் இளைஞருக்கு டெங்கு பாதிப்பு- மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு

பவானியை சேர்ந்த இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கு, கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஈரோட்டில் இளைஞருக்கு டெங்கு பாதிப்பு- மருத்துவமனையில் அனுமதி

இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வீடுகளை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.