ஈரோடு- வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
Oct 13, 2020, 16:41 IST1602587506000
ஈரோடு
ஈரோடு அடுத்த மொடக்குறிச்சி பகுதியில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. நாதகவுண்டம் பாளையத்தில் நடைபெற்ற
தொடக்க நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து பெற்றனர். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சம்
பேரிடம் கையொப்பம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்